2023 நிதி ஒதுக்கீடு வரம்பிற்குள் பல மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், மேல், தெற்கு மற்றும் வடமாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இளங்கலை பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆட்சேர்ப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.