ஆல்பர்ட்டா மாகாணத்தில் குறிப்பாக கல்கரியின் ஐந்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் வேறும் ஐந்து இடங்களிலும் ஈகோலை தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈகோலை பக்றீரியா தொற்று பரவுகை காரணமாக குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில் குறித்த இடங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் 17 பேருக்கு இந்த நோய் தொற்று பரவியுள்ளமை உறுதியாகி உள்ளதுடன் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஈகோலை தொற்று காரணமாக சுமார் 50 சிறுவர்கள் வைத்தியசாலைக்கு சென்று பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூடப்பட்ட பகுதிகளில் சிறுவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் நோய் தொற்று குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *