இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சி.ஐ.டியினர் அந்த நாட்டிற்கு செல்வதற்குத் தயாராக உள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆடம்பர தொடர்மாடியொன்றில் இலங்கையைச் சேர்ந்த 45 வயதாக கோடீஸ்வரர் ஒனேஸ் சுபசிங்க கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளையடுத்தே குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதேவேளை, சுபசிங்கவின் கொலை இலங்கையில் திட்டமிடப்பட்டு இந்தோனேசியாவில் நிறைவேற்றப்பட்டதாகவும் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது நண்பி இதன் பின்னணியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *