இலங்கை மகளீர் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்படும் போட்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி மற்றும் போட்டிகளுக்காக வீராங்கனை ஒருவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 250 டொலரை 750 டொலர்களாக அதிகரிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

அணிக்கு பெயரிரப்படும் மேலதிக வீராங்கனை ஒருவருக்கு போட்டி கட்டணத்தில் 25 வீதத்தை வழங்கவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அதேபோல் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு வீராங்கனைக்கும் 250 டொலரை ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்படவுள்ளது.

இந்த கொடுப்பனவு கடந்த ஜனவரி (2023) மாதத்திலிருந்து வழகப்படும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இலங்கை மகளீர் கிரிக்கெட் அணி இந்த முறை T20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்று வருவதுடன் இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *