ராமு தனராஜா

அரச கவிஞர் காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய எண்ணங்களின் வண்ணங்கள் நூல் வெளியீட்டு விழா பசறை நூலக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா எழுதிய எண்ணங்களின் வண்ணம் எனும் நூலை ஊவா தமிழ் இலக்கிய பேரவை வெளியிட்டு வைத்தது.

குறித்த நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் மற்றும் வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் புஸ்பகாந்தன் கலந்து கொண்டதுடன் சிறப்பு நூல்களையும் பெற்றுக்கொண்டார்.

இக் கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு விஷேட அதிபர்கள் ஆசிரியர்கள் இலக்கியவாதிகள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *