தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதை சிலர் இந்தியாவுடன் இணைந்து கொண்டாட முயற்சிப்பதாக தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த நிலையத்தின் இணை அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர் இதனை தெரிவித்துள்ளார்.
மார்ச் 22 ஆம் திகதியை கொண்டாட சிலர் துடிப்பது அர்த்தமில்லாத ஒன்று என அவர் கூறியுள்ளார்.
காரணம் தோட்ட தொழிலாளர்கள் எப்படி வந்தார்களோ இன்றும் அவர்கள் அப்படியே வாழ்கின்றமை கவலைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வெறும் விளம்பரத்துக்காக எதையும் செய்யாமல் தோட்ட தொழிலாளர்களின் இருப்பை உறுதிச் செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.
ஆகவே 22 ஆம் திகதி காலை 10 மணிக்கு அப்புத்தளையில்; “ஏமாற்று வேலை வேண்டாம், பெருந் தோட்ட மக்களின் காணி,வீடு, மற்றும் சிவில் உரிமைகளை வழங்கு என கோரி சைக்கிள் பேரணி ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் மார்க்ஸ் பிரபாகர் மேலும் தெரிவித்துள்ளார்.