எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை நீங்கி மழை பொழிய வேண்டுமென விஷேட தொழுகையும் பிரார்த்தனையும் இன்று 30.08.2023 ஏறாவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றன.
ஏறாவூர் ஜம்இய்யத்து உலமா சபையின் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது மௌலவி எல்.எச்.அப்துல்லா ஹாஷிமி தொழுகை நடாத்தியதுடன், உலமா சபையின் புதிய தலைவர் மௌலவி ஏ.எல்.சாஜித் ஹுஸைன் பாகவி பிரார்த்தனை நடாத்தினார்.
மார்க்க அறிஞர்கள், மதரசா மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பெரும் எண்ணிக்கையிலானோர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.