காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 5 நாட்கள் பயணமாக ஐரோப்பாவுக்கு சென்றுள்ளார். அவரது இந்த வெளிநாட்டுப் பயணம் இந்திய அயலக காங்கிரஸ்(ஐ.ஓ.சி.) மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு சென்றடைந்துள்ளார். அங்கு 7-ந் தேதி ஐரோப்பிய ஆணைய எம்.பி.க்களை சந்தித்து பேசுகிறார்.

இதையடுத்து நாளை(8-ந் தேதி) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்கிறார். அங்கு ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசுகிறார்.

தொடர்ந்து 9-ந் தேதி, பாரீஸ் நகரில் நடக்கும் பிரான்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர், நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு ராகுல்காந்தி செல்கிறார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *