தகவல் K.K

திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் இரவு தபால் ரயிலில் இருந்து தந்தை மகளை தள்ளிவிட்டு , தந்தையும் ரயிலிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தந்தையும் மகளும் நீண்ட நேரமாக ரயில் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தை மகளை தள்ளி விட்டு தானும் ரயில் முன் குதித்ததாகவும் அவர்கள் அடையாளம் தெரியவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்
திருகோணமலை -கந்தளாய் புகையிர நிலையத்திற்கு அருகில் இச்சம்பவம் இன்றிரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *