கனடாவில் பெண் ஒருவர், தனது செல்லப் பிராணிகளை கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அநேகமானவர்கள் செல்லப்பிராணிகளை தங்களது குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே கருதுகின்றனர்.
ரெஜினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
தீவிர புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சூசன் டிக்கன்ஸ் என்ற பெண், தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்.
இவ்வாறான ஓர் நிலையிலும் தனது செல்லப் பிராணிகளுக்கு நல்ல ஓர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிர முயற்சி எடுத்து வருகின்றார்.