கனடாவில் பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு உச்சம் தொடலாம்

Share

Share

Share

Share

கனடாவில் உணவு பண்டங்களுக்கான விலையில் மாற்றம் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.

நுகர்வோர் விலைக் குறியீடு பிப்ரவரி மாதம் 5.2 சதவீதமாக பதிவான நிலையில் ஜனவரியில் 5.9 சதவீதம் என பதிவாகியிருந்தது. பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிபுணர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது.

பணவீக்கம் சரிவடைந்து காணப்பட்டாலும், அதன் தாக்கம் பொருட்களின் விலையில் பிரதிபலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த பிப்ரவரியில் உணவு பண்டங்களின் விலை 10.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாஸ்தா பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 23.1 சதவீதம் அதிகரித்துள்ளது. பழச்சாறு வகைகளின் விலை 5.2 சதவீதத்தில் இருந்து 15.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஆரஞ்சு பழச்சாறு விலை அதிகரித்துள்ளது. ஆனால் ஆரஞ்சு பழங்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.1 சதவீதத்தில் இருந்து 15.1 சதவீதம் என்றே அதிகரித்துள்ளது.

மாமிச வகைகளும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.2 சதவீதம் என அதிகரித்துள்ளது. மீன் மற்றும் கடல் சார்ந்த உணவுகளின் விலையில் 1% மட்டுமே அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சியை பொருத்தமட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.4 சதவீதத்தில் இருந்து 3.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி