நச்சுப் பொருள் ஒன்றை ஸ்ப்ரே செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரீ.ரீ.சீ ரயில் சேவையில் பயணம் செய்து கொண்டிருந்த பயணி ஒருவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் திடீரென குறித்த சந்தேக நபர், சக பயணி மீது நச்சு கலந்த பொருள் ஒன்றை ஸ்பிரே செய்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
35 முதல் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் நடத்திய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.