இந்திய பொலிசார் கனடா எல்லையில் இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்கள்.
30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) ஆகியோர் உட்பட எட்டு பேர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்டார்கள்.ஷ
இந்நிலையில், கனடா எல்லையில் இந்தியர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்போவதில்லை என இந்திய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கனடா பொலிசார் இதுவரை இந்த விடயம் தொடர்பாக தங்களை அணுகவில்லை என்றும், அவர்கள் தங்களை அணுகும் வரை அல்லது, கனடா விசாரணையில் ஏதாவது முக்கிய விடயம் தெரியவருவதுவரை, தாங்கள் அந்த விடயம் குறித்து விசாரிக்கப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.