பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பொலிஸ் தலைமையகத்தை பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

ஆயுதங்களுடன் பொலிஸ் தலைமையகத்தில் புகுந்து கையெறி குண்டு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பொலிஸ் நிலையத்தை கைப்பற்ற முயற்சித்தனர்.

பொலிஸ் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் 4 பொலிசாரும் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *