கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் ஹமில்டனில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மீது குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார இடைவெளியில் இரண்டு தடவைகள் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையொன்றுக்கு ஒரு வார இடைவெளியில் இரண்டு தடவைகள் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான குண்டு அச்சுறுத்தல் என்பது பற்றிய விபரங்கள் அதிகமாக வெளியிடப்படவில்லை.

கிங்ஸ் வீதி மற்றும் நாஷ் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிளென்டேல் இடைநிலைப் பாடசாலை மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் மாதத்திலும் குண்டுத் தாக்குதல் நடாத்தப் போவதாக பாடசாலை மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் அறிந்த பொலிஸார் பாடசாலைக்கு சென்று சோதனையிட்டு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என அறிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *