சம்பவம் கனடா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தாக்குதல்

Share

Share

Share

Share

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் லாவல் பகுதியில் சிறுவர்களை இலக்கு வைத்து சாரதி ஒருவர் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் மீது பஸ்ஸை மோத செய்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு வயதான இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் சில சிறார்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட அடிப்படையில் சிறுவர் பராமரிப்பு நிலைய கட்டிடத்தின் மீது பஸ்ஸை மோதச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய 51 வயதான அமென்ட் என்ற சாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கொலை குற்றத்தில் ஈடுபட்டதாகவும் தாக்குதல் நடத்தியதாகவும் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலை மேற்கொண்ட குறித்த சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்