சிலி நாட்டில் மினி பேருந்து மீது பயணிகள் ரயில் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தைக் கடந்து சென்ற அந்த பேருந்தில் 14 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பேருந்து பாதி தூரம் சென்ற போது மின்னல் வேகத்தில் வந்த பயணிகள் ரயில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே 5பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சிலி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *