ஜடேஜா தனது விரல்களில் வலி நிவாரணி கிரீமை தடவினார்

Share

Share

Share

Share

ஜடேஜா தனது கைவிரலில் மர்ம பொருளை தடவினார் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

முகமது சிராஜ் தனது உள்ளங்கைக்கு மேலே வைத்து ஒரு க்ரீம் போன்ற திரவத்தை ஜடேஜாவிடம் கொடுக்கிறார்.

அதை ஜடேஜா தனது விரலால் லேசாக தொட்டு, பந்தை பிடித்து வீசும் இடது கையின் அனைத்து விரல்களிலும் தடவினார்.

ஜடேஜா தனது கைவிரலில் தடவிய மர்ம பொருள் என்ன என்று சர்ச்சை கிளம்பின.

அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம்பெய்ன் டுவிட்டரில் கூறும் போது, இது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்றார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, ஜடேஜா தனது விரல்களில் என்ன பூசுகிறார்? இது போன்றதை நான் பார்த்ததில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப்டிடம் இந்திய அணி விளக்கம் அளித்தது.

நடுவரை இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது, ஜடேஜா தனது விரல்களில் வலி நிவாரணி கிரீமை தடவியதாக இந்திய அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...