டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வெப்பநிலை கடுங்குளிரை உணரச் செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை வெப்பநிலை மறை 5.6 செல்சியஸ் பாகையாக காணப்பட்டது. கடந்த 20 ஆம் திகதியும் இதே விதமாக மறை 5.6 செல்சியஸ் பாகை அளவில் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

இந்தக் காலப்பகுதியில் அதிக கூடிய வெப்பநிலையாக 4.3 பாகை செல்சியஸாக அமையும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பான குறிகாட்டிகளில் குறிப்பிடப்படும் அளவுகளை விடவும் கடுமையான குளிர் இந்த காலப்பகுதியில் நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *