தினமலர் பத்திரிகையில் “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு , கக்கூஸ் நிரம்பி வழிகிறது ” என்ற தலைப்பை பத்திரிகையின் தலைப்பு செய்தியாக வெளியிட்டதை அண்ணாச்சி செய்தி சேவை வன்மையாக கண்டிக்கிறது. ஊடக அறத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் ஊடக மாப்பியாக்களாக செயற்பட கூடாது .
தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு பாடசாலை நடுநிலை மாணவர்களுக்கான சத்து உணவு திட்டத்தை அமுல் படுத்தியது. இதனை பலர வரவேற்றனர்.
ஆனால் தமிழ் நாட்டில் வெளிவரும் பழம்பெரூம் பத்திரிகையான தினமலர் தமது தலைப்பில் “மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு , கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என நையாண்டியாக போட்டு இருக்கிறது
இதனை தி.மு க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார்.
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி… pic.twitter.com/M8H94rVn68
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023
அத்துடன் தமிழ்நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
ஆயினும் இந்த செய்தி ஒரு பதிப்புக்களில் தவறுதலாக வெளிவந்திருப்பதாக அதன் நிர்வாக கி.ராமசுப்பு டூவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
திரு கி.ராமசுப்பு ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை,கோவை ,மதுரை ,பாண்டிச்சேரி ,திருநெல்வேலி ,நாகர்கோவில் பதிப்புகளில் மேலே குறிப்பிட்ட செய்தி வெளிவரவில்லை.
திரு R. சத்தியமூர்த்தி ஆசிரியராக கொண்ட தினமலர் ஈரோடு,சேலம் பதிப்புகளில் இந்த செய்தி வெளியாகி உள்ளது
– கி.ராமசுப்பு,ஆசிரியர் pic.twitter.com/4yFEEkYbA5
— Dinamalar (@dinamalarweb) August 31, 2023
மேலும் இந்த பத்திரிகையை புறக்கணிக்க சொல்லி பல போராட்டங்கள் நடைப்பெறுகின்றன.
ஊடக தர்மம் பெண்ணின் கற்பை போன்றது என்பதை ஊடகவியலாளர்கள் நினைவில் வைத்து கொள்ளுங்கள்