அஸ்ரப் அலீ

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சிலருக்கு தடை விதித்து தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – நிலாவெளி பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் திருகோணமலை நீதிவான் நிதிமன்றினால் 14 பேருக்கு எதிராக குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையுத்தரவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை பிரசாத், தமிழ்ப் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், செயலாளர் ரமேஸ் நிக்லஸ், பாராhளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், குச்சசெளி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொன்னையா வைத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மற்றைய தரப்பாக பௌத்த பிக்குகள் உட்பட 7 பேருக்கும் எதிராக இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *