துருக்கியின் தெற்கு, மத்திய பகுதிகள் மற்றும் சிரியாவில் கடந்த 6ம் திகதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியை பதினைந்து நாட்களுக்குப் பிறகு கைவிட துருக்கி முடிவு செய்துள்ளது.

இரண்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் மீட்புப் பணிகளை கைவிட முடிவு செய்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், துருக்கிக்கு மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 38,000 பேர், சிரியாவில் 6,000 பேர் என இதுவரை 44,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *