அமெரிக்க அதிபர் பைடன் கேபிடால் நகரில் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையின்போது, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோதும் மற்றும் உக்ரைன் மீது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படையெடுத்தபோதும், அமெரிக்காவின் பொருளாதாரம் பூமியில் வேறு எந்த நாட்டையும் விட வளர்ச்சி நிலையில் சிறப்பாக உள்ளது குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில், கொரோனா பெருந்தொற்றானது நம்முடைய வினியோக சங்கிலியில் இடையூறு ஏற்படுத்தியது.

உக்ரைனில் புதினின் முறையற்ற மற்றும் அராஜக போரானது, எரிபொருள் மற்றும் உணவு வினியோகத்தில் பாதிப்பை உண்டாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு நமது பொருளாதாரம் தள்ளாடி கொண்டு இருந்தது.

ஆனால், நான் இங்கே நின்று கொண்டிருக்கும்போது, 1.2 கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்து இருக்கிறோம். இதற்கு முன் வேறெந்த அதிபரும் 4 ஆண்டுகளில் செய்யாத வகையில், 2 ஆண்டுகளில் அதிக வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *