நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில்  மூவர் படுங்காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து 14.02.2023 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்தை நோக்கி பயணித்த போதே வீதியை விட்டு விலகி பாதுகாப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த ஜனவரி 20ம் திகதி 7 உயிர்களை காவுகொண்ட கோர விபத்து இடம்பெற்ற அதே இடத்திலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *