விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று உலகத் தமிழர்பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009 மே மாதம் நடந்த உச்சகட்ட போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர்பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்றுகூறியதாவது:

“பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.ம் என்று நம்புகிறோம்”

இதேவேளை, மேற்படி கருத்தை இலங்கை இராணுவம்n மறுத்துள்ளது.

இராணுவ தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

நெடுமாறன் போன்றோரின் கருத்தால் இலங்கையில் மீண்டும் மக்களுக்கு இடையில் நிலவும் ஒற்றுமை சீர்குழையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *