பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதுமபிடிய குடுகல்பதனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கள்ளச்சாரயம்  (கசிப்பு) உற்பத்தியில் ஈடுபட்டிருந்த  7 பேர் பசறை பொலிஸாரினால் கைது செயுயப்பட்டுள்ளனர்.

காட்டு பகுதியில் கள்ளச்சாரயம் காய்ப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசியல் தகவலை அடுத்து எடுத்த அதிரடி நடவடிக்கையில் கசிப்பு பெரல்கள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டன

 

56,58,36,48,40,28 மற்றும் 31 வயதுடைய மீதும்பிடிய குடுகல்பதனை பகுதியைச் சேர்ந்த ஏழு பேரே கைதானவர்கள் என பசறை பொலிஸார் கூறினர்.

 

இவர்களிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த 576250 மில்லி லீற்றர் கோடாவும் 750 மில்லி லீற்றர் கசிப்பும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி E.M. பியரட்ணவின் ஆலோசனைக்கு அமைய சாஜன் உபுல் (37118) , சாஜன் நிரஞ்சன் (37315), சமில் (60558) ஆகிய பொலிஸ் அதிகாரிகளினால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *