பசறை பத்தாம் கட்டை மதுபானசாலைக்கு முற்றுக்கட்டை! வடிவேல் சுரேஷ் MP யின் போராட்டம் வெற்றி!

Share

Share

Share

Share

பசறை பத்தாம் கட்டையில் புதிதாக திறக்கப்படவிருந்த மதுபான சாலை வடிவேல் சுரேஷின்  தொடர் அழுத்தத்தினால் இடைநிறுத்தப்பட்டது
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த  வடிவேல் சுரேஷ் MP
மலையகப் பெருந்தோட்டங்களை குறிவைத்து அதிகளவிலான மதுபான சாலைகள் திறக்கப்படுகின்றது
பணம் தின்னும் முதலைகளின் சூழ்ச்சி மலையக சமூகத்திற்கு அச்சுறுதலாகவும் சமூக சீர்கேட்டிற்கும் வித்திடுகின்றது.
மலையகப் பெருந்தோட்டங்களில் பாடசாலை நூலகம் மலசலக்கூடம் நீர் வசதி என பல அபிவிருத்தி வேலை திட்டங்களை அத்தியாவசியமாக
இருந்த போதிலும் அவற்றைக் கண்டு கொள்ளாது மதுபான சாலைகள் திறக்கப்படுவதற்கு இலகுவாக அனுமதி கிடைக்கின்றது.
பசறை பத்தாம் கட்டையில் இவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்படுகின்ற மதுபான சாலைக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தோம் அதற்கு பலனாக அவ்விடத்தில் திறக்கப்படவிருந்த மதுபான சாலை மூடு விழா கண்டது .
பெருந்தோட்ட மக்களின் அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க தோட்டங்களுக்குள் மதுபான சாலை அமைக்கப்பட்டால் அதற்கு எதிராக பாரிய போராட்டம் வெடிக்கும் என்பதனை மக்களின் பணத்தை சுரண்ட காத்திருக்கும் பணம் தின்னி முதலைகள் தெரிந்து கொள்ளட்டும்.  என கூறியதாக அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...