அஸ்ரப் அலீ

இரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதன் மூலம் பயணிகள் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட வேண்டும் என விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் 300 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் காத்தாடிகளை பறக்கவிடுவதும், ஆளில்லா விமானங்களை பறக்கவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

காத்தாடிகளை பறக்கவிட பயன்படுத்தப்படும் தடிமனானகயிறு வான்வெளிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே கட்டுநாயக்கா, மத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள வானில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு நிர்வாகம் அறிவித்தல் விடுத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *