டொரன்டோ நகரின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 16 மணித்தியாலங்களில் சுமார் 30 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பனிப்புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பது தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பனிப்புயல் ஏற்படக்கூடிய பிரதான வீதிகளுக்கு அருகாமையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன தரிப்பு தொடர்பிலான சட்ட விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *