ஸ்காப்ரோவில் பனிப்பொழிவு ஏற்பட்ட வீதியில் வாகனத்தை செலுத்திய போது இடம் பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மற்றும் சில வாகனங்களுடன் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
41-ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகன விபத்து சம்பவத்துடன் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டிருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 47 வயதான வாகன சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்