பஸ்  பயணத்தின் நடுவே சில பயணிகள் தொழுகை நடத்துவதற்கு வசதியாக, பஸ்ஸை சில நிமிடங்கள் நிறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் நடத்துநரின் தொழில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டார்

அதன் எதிரொலியாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பரேலிக்கு உட்பட்ட ஒரு பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றில் மோஹித் யாதவ் என்ற வாலிபர் ஒப்பந்த அடிப்படையில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் வழக்கம்போல் பணியை மேற்கொண்டிருந்த அவர் மீது, குறிப்பிட்ட அந்த நாளில் ராம்பூருக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது பஸ்ஸை திடீரென சில நிமிடங்கள்  நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதில் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகளில் சிலர் தொழுகை நடத்துவதற்காக, பேருந்து நிறுத்தப்பட்டதாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது பிற பயணிகள் குற்றம்சாட்டினர்.

இதனால் அவரை வேலையில் இருந்து நீக்கினார்கள்.

தனக்கு நியாயம் கிடைக்க அவர் போராட்ட்டய் நடத்தினார். யாருமே கண்டு கொள்ளவில்லை.

மனைவி மூன்று வயது மகன் , திருமணமாகத தங்கை   என குடும்ப சுமைகளை சுமந்தவருக்கு  வாழ்க்கையே இருளாக தெரிந்துள்ளது.

இதனால் தன் உயிரை மாய்த்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *