ஜனாதிபதி நன்றி

Share

Share

Share

Share

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம்,  ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் பாரிய சீர்திருத்தங்களை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இலங்கையை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னர் கடன் வழங்குநர் குழுவுடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு கடன் நிபந்தனைகள் தொடர்பிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதில் தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணக்கம் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைய,  உத்தியோகபூர்வ கடன் வழங்குநர், வர்த்தக கடன் வழங்குநர் அல்லது கடன் வழங்குநர் குழுவுடன் கடன் உடன்படிக்கைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட மாட்டாது என  ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடன் வழங்குநருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், இலங்கை எந்தவொரு கடன் வழங்குநருடனும் இடைக்கால உடன்படிக்கையில் ஈடுபடவில்லை எனவும் ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது