அமெரிக்காவை சேர்ந்த ‘பியு ரிசர்ச் சென்டர்’ என்ற அமைப்பு ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இந்தியா உள்பட 24 நாடுகளில் 30 ஆயிரத்து 861 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 20-ந் தேதி முதல் மே 22-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

பிரதமர் மோடி பற்றிய உளகளாவிய பார்வை, இந்தியா உலக வல்லரசு ஆவதற்கான வாய்ப்பு, இதர நாடுகளை பற்றிய இந்தியர்களின் கருத்துகள் ஆகியவை கருத்து கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்து கொண்டுள்ளனர். அவர்களில் 55 சதவீத இந்தியர்கள் பிரதமர் மோடியை தீவிரமாக ஆதரிக்கும் கருத்து கொண்டுள்ளனர்.

20 சதவீத இந்தியர்கள் மட்டுமே மோடிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவை பற்றிய உலக மக்களின் கருத்து சாதகமாகவே உள்ளது.

46 சதவீதம் பேர் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 34 சதவீதம் பேர் எதிராக கருத்து தெரிவித்தனர். 16 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *