ஓய்வு எடுக்கும் பகுதியில் புயலுக்கு பயந்து ஒதுங்கி இருந்த குறித்த இளைஞன் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அவர்ர் படுகாயமடைந்துள்ளான்.

வடகிழக்கு பிரான்சின் Senones (Vosges) நகரில் 19 வயதுடைய இளைஞன் ஒருவன், புயலில் சிக்கி பலியாகியுள்ளான். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இளைஞன் பலியானதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை மாலை முதல் பிரான்சின் 80 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ‘மதிஸ்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த சேதம் விளைவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 142 கி.மீ வேகத்தில் புயல் வீசியிருந்தமையும், பரிசில் உள்ள பல்வேறு பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் கல்லறைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *