கர்நாடகத்தில் நாங்கள் செய்த பணிகள் இந்தியா முழுவதும் பிரதிபலிக்கப்படும்

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது .

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா , துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்றுள்ளனர் .

இந்த திட்டத்தின் கீழ் 1.20 கோடி பெண்கள் பயனடைய உள்ளனர். இத்திட்டத்திற்க்காக கர்நாடகா மாநில அரசு ரூ.17,500 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

தேர்தலின் போது நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் வழங்க மாட்டோம். கர்நாடகத்தில் நாங்கள் செய்த பணிகள் இந்தியா முழுவதும் பிரதிபலிக்கப்படும்.

காங்கிரசின் உத்தரவாதங்கள் வெறும் திட்டங்கள் அல்ல, அவை ஒரு ஆட்சி மாதிரி. ஏழை மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் எண்ணம்.

தேர்தலுக்கு முன் அளித்த 5 வாக்குறுதிகளில் மூன்று வாக்குறுதிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. இது நான்காவது வாக்குறுதியாகும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *