பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த சிறப்பு வாகன சோதனையில் போக்குவரத்து விதியை மீறிய 32 ஆம்னி பஸ்களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு சோதனை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை யொட்டி வெளியூர்களில் தங்கியிருக்கும் பலர் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு ரெயில், பஸ்களில் கடந்த சில நாட்களாக புறப்பட்டு சென்றனர். அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்டது.

அதனால் பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் குடும்பத்துடன் தங்கள் ஊருக்கு புறப்பட்டனர். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் வேலூர் சரக இணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவன் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி, வாலாஜா, வாணியம்பாடி, பள்ளிகொண்டா ஆகிய சுங்கச்சாவடிகளின் அருகே சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *