உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் தங்களது கணவர்கள் மற்றும் மகன்களை கட்டாயப்படுத்தி ராணுவத்திற்கு அனுப்பும் அரசின் முடிவுக்கு பெண்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி சி.என்.என். பத்திரிகை வெளியிட்டு உள்ள செய்தியில், ரஷியாவுக்கான டெலிகிராம் சேனல் பகிர்ந்துள்ள வீடியோவில், 4 நாட்களே பயிற்சி பெற்ற தங்களது அன்புக்கு உரியவர்களை தாக்குதல் குழுவில் சேரும்படி, மார்ச் மாத தொடக்கத்தில் கட்டாயப்படுத்தி உள்ளனர் என பெண்கள் கூறுகின்றனர்.

அவர்களில் ஒரு பெண், ஆயுதம் ஏந்திய 100 எதிரி படையினருக்கு எதிராக 5 பேரை அனுப்புகின்றனர். பலியாடுகள் போன்று எதிரிகளுக்கு எதிராக எனது கணவரும் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளார். அவர்கள் சொந்த நாட்டுக்கு சேவையாற்ற தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஆனால், புயலை எதிர்கொள்ளும் வீரர்களை போன்று அவர்களுக்கு தேவையான பீரங்கிகள், வெடிபொருட்களை கொடுத்து அனுப்புங்கள் என நாங்கள் கேட்டு கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *