மடகாஸ்கரில் விளையாட்டு விழாவின் தொடக்கத்தில் ஏற்பட்ட நெரிசலில் 13 பேர் இறந்ததாகவும் 108 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் அன்டனானரிவோவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஏறக்குறைய 50,000 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நிகழ்வில் கலந்து கொண்ட செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தியப் பெருங்கடல் தீவுகள் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *