டெஸ்லா நிறுவனம், சுய ஓட்டுதல் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2016 முதல் 2023 வரை விற்பனையான, டெஸ்லாவின் S, X, 3 மற்றும் Y மாடல் கார்களை திரும்பப்பெறுவதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து, அந்நிறுவன பங்குகள் சுமார் 5 சதவீதம் சரிவை சந்தித்தன.

இந்நிலையில் ஓட்டுநர் உதவிக்காக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், விபத்து நேரிடும் அபாயம் இக்கார்களில் அதிகரிக்கக்கூடும் என அமெரிக்க வாகன ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு தீர்வாக, மேம்படுத்தப்பட்ட மென்பொருள் வெளியிடப்படும் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *