ராஜா சாரி நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர்

Share

Share

Share

Share

அமெரிக்க விமானப்படையின் பிரிகேடியர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் ராஜா சாரியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். பிரிகேடியர் ஜெனரல் என்பது அமெரிக்க விமானப்படையின் ஒரு நட்சத்திர ஜெனரல் அதிகாரி பதவி ஆகும்.

இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபை ஒப்புதல் வழங்க வேண்டும். 45 வயதான ராஜா சாரி தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ‘க்ரூ-3’ என்ற நாசாவின் விண்வெளி திட்டத்திற்கு தலைவராக உள்ளார்.

அமெரிக்க விமானப்படையில் கர்னலாக இருந்த ராஜா சாரி, 461-வது விமானப்படை குழுவின் கட்டளை அதிகாரியாகயும், அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான எப் 35-ன் ஒருங்கிணைந்த பரிசோதனைப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

ராஜா சாரி நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர்களில் ஒருவராக தேர்வாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை