ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாடகை வீடுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பத்தாண்டு காலப் பகுதியில் தற்போதைய பற்றாக்குறையானது இரண்டு மடங்காக உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான குடிப்பெயர்வுகள் உள்ளிட்ட சில காரணிகளினால் இவ்வாறு ஓர் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.

இதன்படி, வாடகை வீடுகளுக்கான பற்றாக்குறை இரண்டு மடங்காக உயர்வடையுமும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகளில் வாடகை வீடுகளுக்கான பற்றாக்குறையானது 312000மாக உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகைக்கு விடும் நோக்கில் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டு நீண்ட காலம் கடந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாடகைக்கு விடும் நோக்கில் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டவையில் 90 வீதமானவை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மானிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய ஆண்டுகளில் வாடகைக்கு விடும் நோக்கில் வீடுகள் நிர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *