ரொரன்றோவில் வாழும் ஒரு தம்பதியர் வேலை நிமித்தமாக 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடு சென்றிருக்கிறார்கள்.

வேலை காரணமாக வெளிநாடு சென்றிருந்த கனேடிய தம்பதியர், மீண்டும் தங்கள் வீட்டுக்குத் திரும்பும்போது, அந்த வீட்டில் வேறு யாரோ வாழ்வதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் விடு திரும்பியபோது, தங்கள் வீட்டைத் தங்களுக்குத் தெரியாமலே யாரோ யாருக்கோ விற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், இந்த மோசடியில் சிக்கியது இந்த தம்பதியர் மட்டுமல்ல. ரொரன்றோவில் வேறு சிலரும் இதேபோல ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இந்த செய்தியில் சொல்லப்பட்டுள்ள தம்பதியரை ஏமாற்றியவர்களைப் பிடிக்க அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்கள்.

குறிப்பாக ரொரன்றோவில் இதுபோல் ஒரு மோசடி புதிதாக உருவாகத் துவங்கியுள்ளதால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ள நிலையில், மற்றவர்கள் தங்கள் வீடுகளைப் பாதுகாக்க சரியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் என்பதை இந்த செய்திகள் எச்சரிகையாக தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *