ஸ்காப்ரோவின் பார்மசி அவென்யூ பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஸ்காப்ரோவின் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் காலில் காயங்களுடன் இருந்த நிலையில் அவரை போலீசார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக டொரன்டோ போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்களை போலீசார் இதுவரையில் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *