ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கும் கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

 

அந்த கடித்ததில் தமக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரமும் கட்சியின் யாப்பிற்கு அமைய தயாசிறி ஜயசேகர ஆகிய உங்களை கட்சியில்  அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து  விலக்குவதோடு செயலாளர் பதவியையும் இரத்து செய்கிறேன் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரான மைத்திரி பால சிறிசேன  எழுதி இருக்கிறார்

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகத்தை பொறுப்பேற்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் ஏக்கநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *