கனடாவில் ஹோண்டா ரக வாகனம் வைத்திருப்பவருக்கு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் சுமார் 5 லட்சம் வாகனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலும் அமெரிக்காவிலும் மொத்தமாக சுமார் ஐந்தரை லட்சம் ஹோண்டா ரக வாகனங்கள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாகவும், கனடாவில் 52000 வாகனங்கள் மீள பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தின் இருக்கை பட்டியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த வாகனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட சில honda வாகன மாடல்களும் இவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *