அமெரிக்காவில் வீசிய பலத்த புயல் காற்று காரணமாக இருவர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்க டெக்சாஸ் மாகாணம் கான்ரோவில் நேற்றைய தினம் (24-05-2023) கடும் சூறாவளி புயல் தாக்கியது.

இதனால் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசி ஆலங்கட்டி மழை கொட்டியது.

இந்த இயற்கை சீற்றத்தால் நகரின் பல வீடுகளுக்குள் நீர் புகுந்தது. தண்ணீரால் நகரம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.

மழைப் பொழிவின்போது புதிய கட்டுமானத்தில் இருந்த வீடு ஒன்று சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *