இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து அணி நேற்று (09) மாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சுழற்பந்து வீச்சாளர்களான துஷான் ஹேமந்த மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்பட்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல, ஓஷத பெர்னாண்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் டெஸ்ட் குழாமில் இடம் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அயர்லாந்து அணி தீவுக்கு வரவுள்ளதுடன் முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 16ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 24ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக 15 பேர் கொண்ட இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளதுடன், விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம மற்றும் சுழற்பந்து வீச்சாளர் துஷான் ஹேமந்த ஆகியோரும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அயர்லாந்து டெஸ்ட் தொடரில், கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அதற்கு பதிலாக அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோர் இலங்கை டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *