இத்தாலியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச்சென்ற சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததால் நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் வட பகுதியிலுள்ள மேகியோர் ஏரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் இரு வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண், ஓர் ஆண், ரஷ்யரான ஒரு பெண், இஸ்ரேலியரான ஓர் ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *