உமா ஓயா நீர் மின் நிலையத்தின் முதலாவது மின்சார உற்பத்தி அலகு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவினூடாக அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் செயற்திட்ட முகாமையாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (18) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு விஜயம் செய்திருந்த போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சரின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உமா ஓயா நீர் மின் நிலையத்தின் மற்றைய மின் உற்பத்தி அலகின் பணிகளும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையும் என கஞ்சன விஜேசேகரவின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு 120 மெகாவாட் ஆகும்.