13,500 கிலோமீட்டர், 11 நாட்கள் இடைவெளியே இல்லாமல் அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பறந்து சென்ற பறவை உலக சாதனையை முறியடித்துள்ளது.

பார்-டெயில் காட்விட் பறவை (bar-tailed Godwit) ஒன்று அலாஸ்காவிலிருந்து அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவுக்கு 8,435 மைல்கள் இடைவிடாமல் பறந்து, ​​ஒரு பறவையின் நீண்ட இடைவிடாத இடம்பெயர்வுக்கான முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

11 நாட்கள் ஓய்வின்றி உணவின்றி பயணம் செய்த அந்த பறவையின் செயற்கைக்கோள் டேக் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

அதன் கீழ் முதுகில் இணைக்கப்பட்ட 5G செயற்கைக்கோள் Tag-ன் படி, பறவையின் இந்த நீண்ட பயணம் அக்டோபர் 13, 2022 அன்று தொடங்கி, 11 நாட்கள் மற்றும் ஒரு மணி நேரத்தில் ஒருமுறை கூட தரையிறங்காமல் தொடர்ந்து பறந்துள்ளது.

கின்னஸ் உலக சாதனைகளின் படி, “234684” என்ற டேக் எண் மூலம் அறியப்படும் பார்-டெயில்ட் காட்விட் (லிமோசா லப்போனிகா), அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,560 கிலோமீட்டர்கள் (8,435 மைல்கள்) உணவு அல்லது ஓய்வுக்காக நிற்காமல் பறந்து சாதனையை முறியடித்துள்ளது.

பொதுவாக, காட்விட் பறவை தண்ணீரில் இறங்கினால், அது இறந்துவிடும், அதன் காலில் வலை போன்ற அமைப்பு இல்லை, அது இறங்க வழி இல்லை.

அதனால் சோர்வு அல்லது மோசமான வானிலை காரணமாக கடலின் மேற்பரப்பில் விழுந்தாலோ, தரையிறங்கினாலோ அதற்கு அதுவே முடிவு.

இருப்பினும், பொதுவாக நியூசிலாந்திற்கு இடம்பெயரும் இந்த காட்விட், 90 டிகிரி திருப்பத்தை ஏற்படுத்தி அவுஸ்திரேலியாவின் கிழக்கு டாஸ்மேனியாவில் உள்ள அன்சன்ஸ் விரிகுடாவின் கரையில் தரையிறங்கியுள்ளது.

பறவை கடந்த தூரம் லண்டனுக்கும் நியூயார்க்கிற்கும் இடையிலான இரண்டரை பயணங்களுக்கு சமம் அல்லது கிரகத்தின் முழு சுற்றளவில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

தொடர்ந்து இரவும் பகலும் பறக்கும் போது அதன் உடல் எடையில் பாதி அல்லது அதற்கு மேற்பட்டவற்றை இழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *